அர்த்தமற்ற
இந்த
கிறுக்கல்கள்
உன் மேலுள்ள
கோபத்தினால்
அல்ல
உன் பிரிவின்
வேதனையால்
இரவுகள்
பல இழந்தாலும்
உன் நினைவுகளை
இழக்க முயலவில்லை
நித்தம் நித்தம்
உனை மறக்க நினைக்கிறன்
அதனால்தானோ
உன்னை நினைக்கிறன்
-------------------------------------
உன்னை இலக்க
விரும்பவில்லை
இழந்த என்னை
நீ
திருப்பி தரும் வரை
-------------------------------------
பகலை எப்படியோ
கழித்து விடுகிறேன்
இரவை கழிப்பதுதான்
என் முதல் கவலை
காலையில்
கண் விழித்ததும்
-------------------------------------
உன்னுள்
புதைந்துபோனவனை
இனி மீட்பது
நீயன்று வேறாரு
-------------------------------------
நினைவுகளின் நிழல்கள்
நெருடுகிறது என்நெஞ்சை
-------------------------------------
உன்னிடம்
முடிந்த பயணத்தை
நினைத்தே
தொடர்கிறேன்
புதிய பயணத்தை
ஒவ்வொருமுறையும்
-------------------------------------
விடியலில்
உன் முகம் பார்க்க
நினைத்தேன் முதலில்
நீயோ விடியலே
இல்லாமல்
செய்துவிட்டாயே
-------------------------------------
கடந்த நினைவோடு
காலம் மறந்து
விழித்திருக்கிறேன்
மறைந்த கனவுகளோடு
மீண்டும்
துளிர்கிறது
மனம் விரும்பாமல்
மாற்றம்
நிகழாது
இன்றுடன்
முடியும்
இரவின் வெளிச்சம்
விடியும் விடியல்
வாழ்வின்
புது விடியல்
கோடை பூக்களாய்
பூக்கும் நாளை
என் வாழ்க்கை
-------------------------------------
தேடி அலைந்தேன்
அன்று
என்னை தேடி அலைகின்றேன்
இன்று
-------------------------------------
விழிகளால் சிறையிட்ட
போது வலிக்காத
இதயம்
இப்போது வலிக்கிறது
நீ என்னை
விடுவித்ததால்
-------------------------------------
ஒரு முறையேனும்
எனை நினைத்துப்பார்
அப்பொழுது
உணர்வாய்
நீ வாழ்வது
வாழ்க்கையா என்று
-------------------------------------
கனவினில்
மட்டும்
என்னுடன் வாழ்ந்துவிட்டு
இன்று
கல்லறையில் என்னை
தூங்கவிட்டாயே
கல்லறையிலும் எனக்கு
நிம்மதி இல்லை
அருகினில் இருக்கும்
பூக்கள்
உன்னை ஞாபகப்படுத்துவதால்
-------------------------------------
உன்னுள்
உறங்கும் நாள்
எதுவென தெரியவில்லை
ஆனால்
மண்ணில் உறங்கும்,
நாள் மட்டும்
அருகில்
-------------------------------------
அல்ல
நீ கொண்டு வரும்
மலர்க்காக அல்ல
நீ சிந்தும் ஒரு துளி
கண்ணீர்க்காக
கண்ணீர்க்காக
-------------------------------------
-------------------------------------
நிஜங்களில் அல்ல
நான் வாழ்வது
உன்
நினைவினில் மட்டுமே
-------------------------------------
காதல்
ஈடில்லா மகிழ்ச்சி
ஈடில்லா துன்பம்
இரண்டும் கிடைத்தது
நன்றி
உனக்கு
-------------------------------------
உன்னை
பிரிய
மனமில்லை
நீ பிரிந்த
பின்பும்
-------------------------------------
உள்ளம்
சுமந்து வந்து
என்னை உச்சியில்
நிறுத்திவிடு
இல்லை
என் உயிரினை
எடுத்துவிடு
நீ மண்ணில் வாழ்ந்திடு
நான் விண்ணில்
காத்திருக்கிறேன்
-------------------------------------